கால்நடை
மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு பழங்குடியின மாணவி 200-க்கு
200 கட் ஆப் மதிப்பெண் பெற்றார் | கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை
பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பழங்குடியின மாணவி சவுமியா
200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று 2-வது இடம் பெற்றார்.
விண்ணப்பங்கள் அதிகரிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேர 23
ஆயிரத்து 21 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் 20
ஆயிரத்து 827 ஆகும். (ஆனால் கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 302 விண்ணப்பங்கள்
மட்டுமே வந்தன) இந்த விண்ணப்பங்களுக்கு தரவரிசை பட்டியல் நேற்று www.tanuvas.tn.nic.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுக்கல்வி பிரிவு பி.வி.எஸ்.சி.
மற்றும் ஏ.எச். பொதுக்கல்வி பிரிவில் 5 பேர் 200-க்கு 200 கட் ஆப்
மதிப்பெண் பெற்று உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1.
ஆர்.எஸ்.கிருத்திகா, ராமநாதபுரம். 2. பி.சவுமியா, தர்மபுரி. 3.
எஸ்.என்.ஆர்த்தி, திண்டுக்கல். 4. டி.கவின்ராஜ், ஈரோடு, 5.
ஆர்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல். தொழில் கல்வி பிரிவு தொழில்கல்வி
பிரிவில் முதல் 3 இடங்கள் விவரம் வருமாறு:- (கட் ஆப் மதிப்பெண்
அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டு உள்ளது) 1. என்.பிரியதர்ஷினி, (200)
விழுப்புரம். 2. வி.மாதேஷ், (199.50) தர்மபுரி. 3. பி.கார்த்திகா, (199)
தர்மபுரி. உணவு தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்
வருமாறு:- 1. எப்.முகமது இர்சாத் உசைன், (199.50) சென்னை. 2.
எஸ்.காயத்திரி, (199.25) கடலூர். 3. ஏ.கே.நாகார்ஜுன், (199) கரூர் கோழியின
தொழில் நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1.எம்.பூஜிதா, (199) நீலகிரி. 2.ஆர்.ஹரிஷ், (198.75) கிருஷ்ணகிரி.
3.வி.சசிகுமார், (198.75) திருவண்ணாமலை. பால் வளத்தொழில்நுட்ப பிரிவில்
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம்வருமாறு:- 1.எஸ்.ஜோதிமணி, (199)
திருப்பூர். 2.எம்.பூஜிதா, (199) நீலகிரி. 3.டி.அபர்ணா, (198.75)
திருவள்ளூர். பழங்குடியின மாணவி சவுமியா பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச்.
பொதுக்கல்வி பிரிவில் 2-வது இடத்தை பெற்ற மாணவி பி.சவுமியா, தர்மபுரியை
சேர்ந்தவர். இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் 200-க்கு 200 கட் ஆப்
மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தை பாரதி திருவண்ணாமலை மாவட்டம் ,
இளங்குன்னி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். தாயார்
சித்திரை செல்வி, அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக
பணியாற்றுகிறார். தரவரிசை பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ
பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறியதாவது:- பாராட்டுகள்
பழங்குடியின மாணவி சவுமியா 2-வது இடத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு எனது
பாராட்டுகள். கலந்தாய்வு 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று
ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த தேதியில் நடத்த கூடிய மட்டும் முயற்சி
எடுப்போம். மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகுதான் இந்த கலந்தாய்வு நடத்தப்பட
வேண்டும். மருத்துவ கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறதா?
என்று பார்க்கப்படும். இவ்வாறு டாக்டர் திலகர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment