https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: July 2017

Thursday, 20 July 2017

எச்சரிக்கை.டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..போலி ஜாதி சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்களுக்கு 'வார்னிங்'




போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில் இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து, மத்திய பணியாளர் மற்றும் குறைதீர் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பேசினார். அப்போது அவர்கூறியதாவது-

நேர்மையற்ற முறையில் போலியாக ஜாதிச்சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 போலியாக ஜாதிச் சான்று அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து, தகவல்களைத் திரட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜூன்1-ந் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், போலியாக சான்று அளித்து வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களின் விவரங்களையும் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன்படி, தங்களின் அரசு வேலையை தக்கவைத்துக் கொள்ள போலியாக ஜாதிச் சான்று அளித்து, தவறான விவரங்களை அளித்த அதிகாரிகள், ஊழியர்களை தொடர்ந்து பணியில் நீட்டிக்கவிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி, ஊழியர் ஒருவர் போலியாக, அல்லது தவறான ஜாதிச்சான்று அளித்து வேலை பெற்றார் எனத் தெரியவந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மார்ச் 29-ந்தேதி வரை போலிச் ஜாதிச்சான்று அளித்து 1, 832பேர் வேலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 276 பேர் டிஸ்மிஸ் ெசய்யப்பட்டுள்ளனர், 1,035 பேர்மீது விசாரணை நடந்து வருகிறது.

இதில் நிதித்துறையில் மட்டும் 1,296 பேர் போலிச் சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர். ஸ்டேட் வங்கியில் 157 பேர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 135 பேர், இந்திய ஓவர் சீஸ் வங்கியி் 112 பேர், சின்டிகேட் வங்கியில் 103  பேர், நியு இந்தியா அசுரன்ஸ், யுனைடெட் இந்தியா அசுரன்ஸில் 41 பேர் போலியாக சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர்இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!


 ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார் எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.
மக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.
இந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும். அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனுப்பவும் முடியும்.
இந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!


*ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது: அமைச்சர் செங்கோட்டையன்*

*9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.


*புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.


சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. 
அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.
லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.
 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு???


வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்



இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.


இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.


இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FLASH NEWS :Today AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension

FLASH NEWS : ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தனியரசு MLA அதிரடி பேச்சு





Tuesday, 18 July 2017

+ 1 புதிய வினாத்தாள் வடிவமைப்பு விவரம்.


NTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்


1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )
2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா
3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா
4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா
5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா
6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)
7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா
8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா
9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)
10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா

அரசுப்பள்ளி ஆசிரியைகள் குழந்தைகளிடம் நட்பாக பழகுகின்றனர், சிறப்பாகக் கல்வியையும் கற்றுக் கொடுக்கின்றனர் - எனவே அரசுப்பள்ளியில் என் ஒரு மகளை சேர்தேன் - பெண் IAS அதிகாரி பெருமிதம்!


மாற்றத்துக்காக மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தேன் என்று சென்னை மாநகராட்சியில் வருவாய்த் துறையின் துணைக் ஆணையாளராக பணியாற்றும் லலிதா தெரிவித்தார்.


தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்துவருகின்றன. அரசு ஊழியர்கள்கூட தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு ஊழியர்கள், குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்ட கேள்விக்கு, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருதால் அரசு ஊழியர்களே தாமே முன்வந்து பள்ளியில் சேர்ப்பார்கள் என்று பதிலளித்தார். 


இந்தச்சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றும் லலிதா ஐ.ஏ.எஸ், தன்னுடைய இரண்டரை வயது மகள் தருணிகாவை கோடம்பாக்கம், புலியூர் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்து அரசு ஊழியர்கள் மத்தியில் முன்மாதிரியாகத் திகழ்கிறார். 
இதுகுறித்து லலிதாவிடம் பேசினோம். ''நான், கடந்த 2014ல் சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றினேன். தற்போது, வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகப் பணியாற்றுகிறேன். கல்வித்துறை துணைக் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவருகிறேன். என்னுடைய கணவர் சுமந்த் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததை வரவேற்றுள்ளனர். 
பொதுவாக, மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி என்றாலே பெற்றோர்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. இந்தப்பள்ளிகளில் சுகாதாரம், கல்வித்தரம் உள்ளிட்டவைகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக்காது என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. மாநகராட்சி, அரசுப் பள்ளிகளின் இடவசதி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. மேலும், மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்கூட தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 
உங்களுடைய குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?
''மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைகள் நட்பாக குழந்தைகளிடம் பழகுகின்றனர். அதோடு சிறப்பாகக் கல்வியையும் கற்றுக் கொடுக்கின்றனர். இதுவே மாநகராட்சிப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய ஆசையை கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்''. 
தருணிகா ஸ்கூலில் எப்படி இருக்கிறார்?
''அவர் சமத்துக்குட்டி. எல்லோரிடமும் நன்றாகப் பழகுகிறார். அவருக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்''. 
மாநகராட்சிப் பள்ளி எப்படி உள்ளது?
 ''மாநகராட்சிப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் உள்ளன. தனியார் பள்ளிகளைவிட சிறப்பாகவே மாநகராட்சிப் பள்ளிகள் செயல்படுகின்றன. அதை மக்கள் உணர வேண்டும். அரை நாள் மட்டுமே  தருணிகாவுக்கு ஸ்கூல்''. 
உங்களைப் போல வேறு யாராவது மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்களா?
''அது, எனக்குத் தெரியவில்லை''. 
உங்கள் குழந்தை என்பதால் சிறப்பான கவனிப்பு பள்ளியில் இருக்கிறதா? 
 ''அப்படி எதுவுமில்லை''. 
கோடம்பாக்கம் பள்ளியை எப்படி தேர்வு செய்தீர்கள்?
''மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்படுகின்றன. அந்த வரிசையில்தான் கோடம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தேன். மாண்டிச்சோரி முறையில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஸ்நாக்ஸ்கூட கொடுக்கப்படுகிறது. வீட்டிலிருந்து கொடுக்கும் ஸ்நாக்ஸைவிட பள்ளியிலிருந்து கொடுக்கப்படும் ஸ்நாக்ஸை விரும்பிச் சாப்பிடுகிறார் தருணிகா. ஸ்கூலில் கட்டணம் கிடையாது. யூனிபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது''. 
வீட்டில் தருணிகா எப்படி?
''அவருக்கு இரண்டு வயது எட்டுமாதங்களாகுகிறது. அவர் படுசுட்டி. நான், தருணிகாவை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததற்கு என்னுடைய கணவரும், குடும்பத்தினரே காரணம்''. 
ஸ்கூலுக்கு செல்லும்போது அவர் அழுதாரா?
''நேற்று தான் (17-ம் தேதி) அவர் ஸ்கூலுக்குச் சென்றார். அவர், அழாதது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றேன். என்னை அங்குள்ள யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஸ்கூல் முடிந்து சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார். அவரது சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்''.

Friday, 14 July 2017

ஓவியாவுக்கு லைக்கோ லைக்ஸ்... ஆர்த்தி மீது ஆங்க்ரி! - பிக் பாஸ் விகடன் சர்வே ரிசல்ட்ஸ் #VikatanSurveyResults


15 செலிபிரிட்டிகள், பல கோடி ரூபாய் பட்ஜெட் என முதல்முறையாக எக்கச்சக்க விஷயங்களோடு தமிழில் வந்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஷோவைப் பற்றி பல சர்ச்சைகள். இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள, விகடன் இணையதளத்தில் சர்வே எடுத்தோம்.
பிக் பாஸ்
‘இது, உளவியல் சார்ந்த ஒரு நிகழ்ச்சி எனக் கருதுகிறீர்களா?', `உள்ளே இருப்பவர்களில் யாருடைய நடவடிக்கைகள் உங்களைக் கவர்கின்றன?' `பங்கேற்பாளர்களில் எரிச்சலூட்டும்விதமாக நடந்துகொள்பவர் யார்?' போன்ற ஒன்பது கேள்விகளுக்கு மக்கள் தேர்ந்தெடுத்த சாய்ஸ் அனைத்துமே ஆச்சர்ய ட்விஸ்ட்.
மொத்தம் 6,610 பேர் இந்த சர்வேயில் பங்கெடுத்தனர். சிலர் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டார்கள். `இந்தப் போட்டி, அனைவருக்குமான ஒரு வாழ்வியல் தத்துவம். மனிதன்,  தன்னைக் காத்துக்கொள்ளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் எதுவும் செய்வான். அதற்கான நிகழ்ச்சிதான் இது' எனப் பலர் தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் ` இந்த நிகழ்ச்சி, மெகா சீரியலைவிட மோசமாக எரிச்சலூட்டுகிறது' என விமர்சித்தனர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
பிக் பாஸ்
`அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பது' என்ற முதல் கேள்விக்கு 4,365 பேர் (66%) `தவறு' எனச் சொன்னாலும், 2,056 பேர் (31.1%)  `தவறுதான். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறதே' என்ற ஆப்ஷனை க்ளிக்கியுள்ளனர். 189 (2.9%) பேர் மட்டும் `இது சரி' என்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு கமல் சொன்ன பதிலை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றே தெரிகிறது. 34.8 சதவீதம் பேர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றாலும்,  50.3 சதவீதம் பேர் `ஏற்றுக்கொள்கிறேன்' என்கிறார்கள். 14.9 சதவீதத்தினர் `இதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் கமல்
`கமல், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகிறார்' என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது. முதல் எபிசோடில் `கமலின் பெர்ஃபாமன்ஸ் செயற்கையாக இருக்கிறது' எனப் பலர் சொன்னாலும், அடுத்தடுத்த வாரங்களில் இயல்பாகப் பேசி லைக்ஸ் வாங்கினார். இவரின் பெர்ஃபாமன்ஸ் `சூப்பர்' என 2,858 பேர் (43.3%) ஆதரவு தெரிவித்தாலும், 2,877 பேர் (43.5%) `சுமார்' என்கிறார்கள். கமல் மேல் என்ன கோபமோ தெரியவில்லை 875 பேர் (13.2%) மட்டும் `மோசம்' என வாக்களித்துள்ளனர்.
பிக்பாஸ் கமல்

`இந்த நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எதுவும் இல்லை' என கமல் ஆரம்பத்திலிருந்து சொல்லிவந்தாலும், மக்கள் இதை ஸ்க்ரிப்ட் என்றே எண்ணுகிறார்கள். சரி பாதி விகிதத்தினர், அதாவது 3,462 பேர் (52.4%) `இது ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி' என எண்ணுகிறார்கள். `குழப்பமாக இருக்கிறது' என 2,011 பேரும் (30.4%), `இல்லை' என 1,137 பேரும் (17.2%) தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ்
இந்த நிகழ்ச்சி, ஓர்  உளவியல் சார்ந்த நிகழ்ச்சிதான் என மக்கள் நம்புகிறார்கள். 3,501 பேர் (52.9%) `ஆம்' எனவும், 2,103 பேர் (31.8%) `இல்லை' எனவும், 1,006 பேர் (15.2%)  `தெரியவில்லை' எனவும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

Big Boss

பங்கேற்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்க் பற்றி 3,349 பேர் (50.6%) `ஏரிச்சலூட்டுகிறது' என்றுதான் பதில் பதிவிட்டிருக்கிறார்கள். `அதைப் பற்றியெல்லாம் சொல்ல ஒன்றுமில்லை' என 2,109 பேர் (31.9%) சொன்னாலும்,  1,152 பேர் (17.4%) மட்டுமே `ஜாலியாக இருக்கிறது' என்கிறார்கள்.
Big Boss
அமோகமாக ஓட்டு வாங்கி மக்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியாதான். 2,649 பேர் (40.1%) ஓவியாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். 1,867 பேர் (28.2%) கணேஷ் வெங்கட்ராமுக்கும், 367 பேர் (5.6%) ஆரவ்வுக்கும்  வாக்களித்திருக்கிறார்கள். நமீதாவுக்கு 352 பேர் (5.3%), ஜூலியானாவுக்கு 342 பேர் (5.2%), பரணிக்கு 311 பேர் (4.5%), ஷக்திக்கு 197 பேர் (3%), ரைசாவுக்கு 182 பேர் (2.8%), வையாபுரிக்கு 124 பேர் (1.9%), சினேகனுக்கு 99 பேர் (1.5%), காயத்ரி ரகுராமுக்கு 63 பேர் (1%), இறுதியாக ஆர்த்திக்கு வெறும் 57 நபர்கள் (0.9%) மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். பரணி தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும்  `Wild card' - என்டரி மூலம் திரும்பி வருவார் என்றே சொல்லப்படுகிறது.
பிக் பாஸ்
3,252 பேர் (49.2%) ஆர்த்திக்கு வாக்களித்து முதல் இடம் வழங்கியிருக்கிறார்கள். 1,753 பேர் (26.5%) காயத்ரிக்கு வாக்களித்து இரண்டாம் இடமும், 869 பேர் (13.2%) ஜூலியானாவுக்கு வாக்களித்து  மூன்றாம் இடம் கொடுத்திருக்கிறார்கள். சினேகனுக்கு 398 பேரும் (6%), ஓவியாவுக்கு 123 பேரும் (1.9%), பரணிக்கு 63 பேரும் (1%), நமீதாவுக்கு 48 பேரும் (0.7%), வையாபுரிக்கு 29 பேரும் (0.4%), ஷக்திக்கு 27 பேரும் (0.4%), கணேஷ் வெங்கட்ராமுக்கு 19 பேரும் (0.3%), ரைசாவுக்கு 17 பேரும், ஆரவுக்கு 12 பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.
கமல்
இந்தக் கேள்விக்கு 2,930 பேர் (44.3%) `பார்க்கவே முடியலை, இதில் பங்கேற்பதா?' என தங்கள் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். `தில்லாகச் செல்வேன்' என 2,299 பேரும் (34.8%), `ஆள விடுங்கப்பா... பார்ப்பதோடு சரி' என 1,381 பேரும் (20.9%) வாக்களித்திருக்கிறார்கள்.

சர்ச்சை எதிரொலி! பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய மாற்றம்


கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆபாசமாக இருப்பதால் அதை தடை செய்யவேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியது, 'சேரி' என்ற வார்த்தையை நடிகை காயத்ரி பயன்படுத்தியதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆபாசம் ஒன்றும் இல்லை என நேற்று கமல் பேட்டியளித்த நிலையில் இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய மாற்றம் நன்றாகவே தெரிந்தது.
அரை குறை ஆடையுடன் வலம் வந்த நடிகை ஓவியா பிறகு ஒரு போட்டிக்காக 15 தோப்புக்கரணம் போட வேண்டும் என கூறப்பட்டது.
குழந்தைகள் எல்லாம் ஷோ பார்ப்பார்கள்.. ஆடை அரை குறையாக இருப்பதால், பேன்ட் அணிந்து வந்தபிறகு தோப்புகரணம் போடும்படி மற்ற போட்டியாளர்கள் சொல்ல உடனே ஓவியா உள்ளே சென்று கால்சட்டை அணிந்து வந்து போட்டியை தொடர்ந்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! ”பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தா விட்டால் கமல் படம் வெளியாகும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்” பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக் கோரி இன்று சென்னையில் கமல் வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!
”பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தா விட்டால் கமல் படம் வெளியாகும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்” பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக் கோரி இன்று சென்னையில் கமல் வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி

தனியார் பள்ளி கட்டண முறையில் வருகிறது மாற்றம்???



தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2013 ம் ஆண்டு முதல் 2016 வரையிலான கட்டண நிர்ணய குழு சிங்காரவேலன் தலைமையில் இயங்கியது. தற்போது மாசிலாமணி தலைமையில் கட்டண நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2009 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்

CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு.

சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு தனி பள்ளிகள் துவக்க அரசு முடிவு



கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் போல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்காக, தனி பள்ளிகள் திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, பார்லிமென்ட் விவகாரத்துறை முன்னாள் செயலர்,
அப்சல் அமானுல்லா தலைமையில், குழு ஒன்றை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் அமைத்தது.ஆலோசனை இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த தாவது: சிறுபான்மையினர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், கல்வியிலும், திறன் வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவில், முஸ்லிம்களின் நிலை, 68.53 சதவீதமாக உள்ளது. அதனால், முஸ்லிம்களிடம் கல்வி வளர்ச்சி ஏற்பட, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போல், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு என, தனிப்பள்ளிகள் துவக்கப்படவேண்டும். அதில், சி.பி.எஸ்.இ., அல்லது என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களை பின்பற்றலாம். அத்துடன், மதரசாக்களுக்கு சென்று, மதப்பாடங்களை கற்கவும் அனுமதிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக, என்.சி.இ.ஆர்.டி., கவுன்சில் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன், சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு என, தனிப்பள்ளிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது.இது பற்றி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகஅதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இந்த பள்ளிகள் திறக்கப்படும்.

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.குழு அமைப்பு : அதேபோல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்காக துவங்கப்படும் பள்ளிகளில், அந்த சமூகத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சி.பி.எஸ்.இ., அல்லது என்.சி.இ.ஆர்.டி., கல்வி முறை பின்பற்றப்படும். இந்த பள்ளிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, சிறுபான்மை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சக செயலர்கள் இடம் பெற்றுள்ள குழுவையும்,மனிதவள மேம்பாட்டுத்துறைஅமைச்சகம் அமைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

வீட்டு வேலை செய்வோருக்கு விரைவில் ஊதியம் நிர்ணயம்!!



'தமிழகத்தில், வீட்டு வேலை செய்வோருக்கு விரைவில், மாத ஊதியம்
நிர்ணயிக்கப்படும்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நிலோபர் கபில் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:

காங்கிரஸ் - பிரின்ஸ்: கேரளாவில் வீட்டு வேலை செய்வோருக்கு, மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அங்கு, வெளிநாட்டில் வசிப்போரின் நலனுக்காக, வெளிநாடு விவகாரத்துறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், இந்த இரண்டையும் அமல்படுத்த வேண்டும்.

தொழில் துறை அமைச்சர் நிலோபர் கபில்: தமிழகத்தில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஊதியம் நிர்ணயிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில், மாத ஊதியத்தை அறிவிக்கும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழியாக பதிவு செய்து சென்றால், அவர்களுக்கு எந்த பிரச்னையும் நேராமல், அரசு பார்த்துக் கொள்ளும். இவ்வாறு விவாதம் நடந்தது

பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்தவர் இன்று நீதிபதி ஒரு திருநங்கையின் கதை..


மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி, இவர் திருநங்கை என்பதால்
சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார்.

திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அதன் பின் கால் சென்டரில் வேலை செய்தார். அங்கும் இவர் கேலிக்கு உள்ளானதால், அங்கிருந்தும் வெளியேறினார்.

அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை கேட்ட போதும் திருநங்கை என்பதால், வேலை மறுக்கப்பட்டது. கடைசியில் தெருவில் மற்றவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கும்  நிலைக்கு ஆளானார். தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தார். பின்னர்  சமூக சேவகராக மாறினார். அதன் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி எல்.ஜி.பி.டி. எனப்படும் மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பு ஒன்றை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கி உள்ளார்.

அவருடைய இந்த சமூக பணிகளுக்காக தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் இப்பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்

BREAKING NEWS: நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு.



வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.

*தடை விதித்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.*

*வழக்கை விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.*

*வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.*

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் 81 லட்சம்


தமிழகம் முழுவதும் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு  காத்திருக்கின்றனர் என்று கொள்கை விளக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:
ேவலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 81 லட்சத்து 30ஆயிரத்து 025 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 18 வயது  முதல் 57 வயதிற்குள் 61 லட்சத்து 2 ஆயிரத்து 702 பேரும், 18 வயதிற்குள் குறைவாக 20 லட்சத்து 22 ஆயிரத்து 579 பேரும், 57 வயதிற்கு மேல்  4,744 பேரும் உள்ளனர். கடந்த 2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 13 லட்சத்து 62 ஆயிரத்து 982 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில், 12 லட்சத்து 19 ஆயிரத்து 570 பேர் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு கல்வி தகுதியனை பள்ளிகளிேலயே ஆன்லைன் மூலம் பதிவு செய்து  கொண்ட மாண, மாணவியர்கள். கடந்த 2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் வாயிலாக அரசு துறையில் 5,802 பேரும், வேலை  வாய்ப்பு அலுவலகங்களில் மூலம் நடத்த பெற்ற வேலை முகாம்கள் மூலமாக பல்வேறு தனியார்நிறுவனங்களில் 20 ஆயிரத்து 778 பேரும்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்


''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு இரண்டு முறை திறன் பயிற்சிக்கான முகாம்கள் நடத்தப்படும்; இதற்காக, 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக, நான்கு லட்சம் ரூபாயில், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை, வெளி மாநில தொழிலாளர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 26 லட்சம் ரூபாய் செலவில், 254 கள அலுவலர்களை பயன்படுத்தி, அவர்கள் பணிபுரியும் இடங்களில் பதிவு மேற்கொள்ளப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2015 வரை, பதிவினை புதுப்பிக்க தவறிய, இரண்டு லட்சம் பேருக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் 
தெரிவித்தார்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்படாது என கைவிடப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய 
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை


" GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 
அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.
கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார். 
இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர். 
அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.

அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்



Thursday, 13 July 2017

அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு!!






அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.
குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி.

அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.

அந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

+2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வுப் பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.

ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.

"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.

குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.

உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.

மணிரத்தினத்திடம் கேட்டேன், "அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ?". அவரது பதில் அடுத்த இடி. "அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா".

ஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.

கல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு முட்டாள் மத்திய அரசாங்கம்.

இந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ ?

இத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய 'மோடி' என்ன பதில் சொல்லப் போகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.

# அனிதாக்களுக்காக "நீட் தேர்வை" எதிர்ப்போம் !

M.Phil & Ph.D ( Full Time & Part Time ) 2017 - 2018 Applications are Invited | Madurai Kamaraj University..


M.Phil & Ph.D ( Full Time & Part Time ) 2017 - 2018 Applications are Invited | Madurai Kamaraj University..


BREAKING NEWS :- JACTO - GEO மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம்!!




கல்வி கொடுப்பது அரசின் கடமையென உத்தரவிடுவீர்களா நீதியரசரே!!





ஜாக்டோ-ஜியோ என்பது பேரியக்கமல்ல, போரியக்கம்!!!தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் அறிக்கை