https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: *வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாவிட்டால் தீர்வு தீக்குளிப்புதானா?* *கலெக்டரிடம் மனு கொடுத்தால் பிரச்சினை தீருமா?*

Sunday, 11 March 2018

*வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாவிட்டால் தீர்வு தீக்குளிப்புதானா?* *கலெக்டரிடம் மனு கொடுத்தால் பிரச்சினை தீருமா?*


இல்லை
தீர்வு 1
கந்து ஒழிப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவரே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (நீதிமன்ற கட்டணம் ரூ.100 மட்டுமே) வட்டி 100க்கு ரூ1 மட்டுமே கணக்கிடப்படும். (ஏற்க்கனவே செலுத்திய வட்டி தொகையையும் ரூ.1 பைசா வட்டியில் சரிக்கட்டிக்கொள்ளலாம்). அசல் தொகையினை மொத்தமாக கட்ட வேண்டியதில்லை.
தீர்வு 2
பணம் கட்ட இயலாதவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்.
தீர்வு 3
தன்னை நொடிப்புநிலை அடைந்தவர் (மஞ்சள் நோட்டீஸ்) என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (நொடிப்புநிலை அடைந்தவர் என அறிவிக்கப்பட்டவர் கடனை திருப்பி கட்ட தேவையில்லை).
குறிப்பு: நீதிமன்ற கட்டணமும், வக்கீல் கட்டணமும் செலுத்த இயலாதவர் அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்படும் இலவச சட்ட உதவி மையத்தை அனுகி வழக்கு தாக்கல் செய்யலாம்.

No comments:

Post a Comment