https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: 2018

Wednesday, 21 November 2018

விரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ வணிகச் சேவை தொடங்கிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய மாற்றத்தினைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த நிலையில் இணையதளத் தரவு மிகப் பெரிய அளவில் குறைந்த விலைக்கு அளிக்க வித்திட்டது. அது மட்டும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளித்தது.

வருவாய் இழப்பு மொபைல் போன் பயனர்களுக்குக் குறைந்த விலையில் இணையதளத் தரவு கிடைத்தாலும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் அதனால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.

கிராமப்புற மொபைல் போன் பயனர்கள் மறுபக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் பலர் இதுவரை மொபைல் போனை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது 10 ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் பெரியதாக அவர்களிடம் இருந்து வருவாய் ஈட்ட முடியவில்லை. இதனால் தனிநபர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்த வருவாயும் பாதிப்படைந்தது. எனவே அவர்களிடம் இருந்து எப்படி வருவாயினை ஈட்டுவது என்றும் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணம் அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. ஆம். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் இதனை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாகச் செய்யும் என்று கூறப்படுகிறது.

வோடாபோன் மற்றும் ஏர்டெல் வோடாபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட சில முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் இதற்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன

ஏர்டெல் ரீரார்ஜ் திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு உள்வரும் அழைப்புகளை இலவசமாகப் பெற முடியும் மற்றும் 26 ரூபாய் டாக் டைம் மற்றும் 100 எம்பி இணையதளத் தரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய், 65 ரூபாய் மற்றும் 95 ரூபாய் என மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது முதல் இந்தத் திட்டங்களை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரும் என்பது மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்

மதுரை : திருமங்கலத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழு திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது முகமது ராஜா என்பவருக்கு சொந்தமான கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் செய்யப்பட்ட ஆய்வில் கெட்டுப்போன 200 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்தனர். 

"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் !


ட்விட்டர்
சீட்டாட்டம் என்பது பல்வேறு எண்களையும், குறியீடுகளையும் கொண்ட கார்டுகளை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு. ஆட்டத்தின் வகை வேறுபட்டாலும் உலகம் முழுவதிலும் ஒரே விதமான கார்டுகளே இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். உலகம் முழுக்க பிரபலமான இதை விளையாடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி விளையாடாதவர்கள்கூட சீட்டுகளைப் பார்த்திருப்பார்கள். சீட்டாட்டம் பொழுதுபோக்காகவும், சூதாட்டமாகவும் ஆடப்படுவதுண்டு. ஆனால், இந்தச் சீட்டுகளில் யாருமே கவனித்திருக்காத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் ஒருவர். Plink என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒருவர், " 8 டைமண்ட் என்ற சீட்டின் நடுவில் மறைந்துள்ள மற்றொரு 8 - ஐப் பார்த்தபோது உங்களுக்கு என்ன வயது? " என்பதை ஒரு கேள்வியாகப் பதிவுசெய்திருந்தார்.
அதை உன்னிப்பாகக் கவனிக்கும் போதுதான் 8 டைமண்ட் சீட்டின் போட்டோவின் நடுவே மறைந்திருக்கும் 8 என்ற எண் பலரது கண்களுக்கும் புலப்பட்டது. உடனே இந்த விஷயம் ட்விட்டரில் வேகமாகப் பரவியது. அதைப் பார்த்த அனைவருமே இதை முதல் தடவையாகப் பார்க்கிறோம் என்றே பதிலளித்திருக்கிறார்கள். "அட இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாமப் போச்சேப்பானு" ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள். அது சரி இந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? அல்லது இப்படி ஒன்று இருப்பதை எப்பொழுது தெரிந்து கொண்டீர்கள் என்பதை கமெண்டில் தெரிவிக்கலாமே...

Saturday, 10 November 2018

பள்ளி பாடத் திட்டத்தில் மீண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்






பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு அடுத்த கல்வியாண்டு முதல் 7-ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலருமான எம்.சங்கிலி தாக்கல் செய்த மனுவிவரம்:

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திரபோஸþடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடி பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினர் இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 1978-1979 ஆண்டு ஆறாம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் அப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 2019-2020 கல்வியாண்டில் இருந்து ஏழாம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Friday, 9 November 2018

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். 

மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் நாளை முழு வேலை நாள்


தீபாவளிக்கான கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாளை முழு வேலைநாளாகும்.

தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு விடுமுறை. அதேநேரத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி திங்கள் கிழமையும் விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்தது.இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை தமிழகம் முழுவதும், முழு வேலை நாளாகும். 

அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், நாளை முழு நாளும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளும், முழு நாளும் வேலை நாளாக பின்பற்றி, பணிகளை பார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, 7 November 2018

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு


நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.        

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். 


அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே,  பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.

Tuesday, 6 November 2018

டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்

மதுரை, கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும். மாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது: மாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் பேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.

புதிய பென்ஷன் திட்ட சேமிப்பு - ஒரு லட்சம் கோடி -தமிழகம் -மிஸ்சிங்

தீபாவளி விடுமுறை நிறைவு : இன்று அரசுப் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில பள்ளிகள் மட்டும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன.

நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும், அனைத்து தரப்பினரும், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை, புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு கொளுத்தியும் மகிழ்ச்சியை பரிமாறினர். 


தீபாவளிக்காக, தமிழக அரசு சார்பில், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது, அரசு காலண்டர் அடிப்படையில், திங்கள்கிழமையன்று வேலை நாளாக இருந்தது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், கூடுதலாக ஒரு நாள் விடுப்பு கோரினர். அதனை ஏற்ற அரசு, தீபாவளிக்காக, திங்கள் கிழமையும் விடுமுறை விடுவதாக அறிவித்தது. 

அதனால், சனிக்கிழமை முதல் நேற்று வரை, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. நான்கு நாள் தொடர் விடுப்பு நேற்று முடிந்த நிலையில், இன்று மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல இன்று இயங்கும். அரசு அலுவலகங்களிலும், இயல்பான பணிகள் இன்று துவங்க உள்ளன. சில பள்ளிகள் மட்டும், இன்றும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன. சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், இன்று விடுமுறையாகும்.

அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி!!!



Saturday, 3 November 2018

INCOME TAX PDF FORM 2019-2020


https://drive.google.com/file/d/1zoZM7XqEEmQs7wL_T-lvEefIw6kt8eox/view

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert


``உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ்

செய்யவும்" - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!



மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், ``உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், ``உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்" என்றனர். 

``இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்... இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்..." என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்" என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. 

இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது.

அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் நிறுத்தப்படுவது தொடர்பாக வரும் மெசேஜ்

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். 

இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.


ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. 


இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. 

ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.


ஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். 

இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. 

ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும்.

இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.



அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. 

இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். 

உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.

ஜியோ

அந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். 

அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம்.

மேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. 

நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், 84 நாள்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.

ஏர்டெல்

இந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. 

இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது?

ஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. 

அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே  ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன.

Wednesday, 26 September 2018

அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிடையாது.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு




எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று மிக முக்கியமான எஸ்சி/எஸ்டி பதவி உயர்வு வழக்கு ஒன்றில் அவர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.


SC/ST reservations in promotion: SC favors the 2006 judgment, Said No to reservation
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கு எதிராக மத்திய அரசும், பல சிறுபான்மையினர் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடந்தது. பல்வேறு காரணிகள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து. மேலும் அரசு பணியில் இவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏழு நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.


அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

2006ல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான். அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று தீர்ப்பளிக்கப்ட்டு இருக்கிறது.

ஆதார்கார்டு செல்லும் முழு விவரம்


அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
அதே சமயம் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்
மேலும்
வங்கி சேவைக்கு
செல்போன் சேவைக்கு
கல்வி சேவைக்கு
போன்றவற்றிற்க்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.
தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.
ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. என்று எச்சரித்துள்ளது.
வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.
ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது. என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.

Monday, 17 September 2018

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!›




காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அதே போல, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என மூன்று பகுதியாக தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

மேலும், மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

*Flash News* *தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.*




Friday, 17 August 2018

கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!


கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், “பட்டய கணக்காளர்கள் ் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சிஏ நுழைவுத் தேர்வுக்காக வரும் ஆண்டில் 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பட்டய கணக்காளர்கள் எனப்படும் தணிக்கையாளர்கள் தேர்வுக்காக அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்பு ஆண்டிலேயே தேர்வு செய்து 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தமிழக கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து பணியாளர் நல துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்’’ என்று கூறினார்.

Thursday, 19 July 2018

CPS அக்கவுண்ட் சிலிப் 23/07/2018 அன்று வெளியிடப்பட உள்ளது


வருமானவரி தாக்கல் நிதியாண்டு 2017-18 -முக்கிய குறிப்புகள்!







இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?



தமிகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.

 தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.

இது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.

இந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.

Flash News : "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER


Saturday, 14 July 2018

அரசு அலுவலக நடைமுறைகள், பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம்!


இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல்  தொடங்கப்படவுள்ளது. 


அரசுத் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த, சிறப்புப் பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவகர், இந்த திட்டம் மூலம், தமிழகத்தில் உள்ள 9 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியமும், 7 லட்சம் ஓய்வூதியர்களின் ஊதியத்தொகை மற்றும் பணபலன்களும் உடனுக்குடன் கிடைக்கும் என்றார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்



அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது:

2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?

மிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?
மிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் விலையில்லா அரிசிதான், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. மற்றொருபுறம் இந்த ரேஷன் அரிசியானது இடைத்தரகர்கள், உள்ளூர் அரசியல் பிரபலங்கள் உதவியுடன் மூட்டை, மூட்டையாக வெளிமாவட்டங்களுக்குக் கடத்தப்பட்டு விற்கப்படும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்திலிருந்து, ரயில்கள் மூலம் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விலையில்லா அரிசி பயணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் ரெய்டின்போது, கைது மற்றும் கடத்தல் பொருள்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. 
அந்த வகையில் கடந்த 10-ம் தேதியன்று, அரிசிக் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை, பேசின்பாலத்தைச் சேர்ந்த இந்திரா ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 900 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனர். கைதான மணிமேகலையும், இந்திராவும், ``பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், ஓட்டேரி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகளை வாங்குவோம். பெரம்பூரில் ரயில் பிடித்து ஆந்திராவுக்குப் போய், அங்குள்ள ஏஜென்டுகளிடம் கொடுப்போம். சில நேரங்களில் ரயிலில் ஏற்றி அனுப்புவதோடு, எங்கள் வேலை முடிந்துவிடும்" என்று விசாரணையின்போது தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் திருவொற்றியூரில் நடத்தப்பட்ட ரெய்டில் 600 கிலோ அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன. அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஆறு பெண்கள், போலீஸில் பிடிபடாமல் தப்பியுள்ளனர். இப்படி, தமிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள், மளிகைக் கடைகளும் குறிப்பிட்ட அளவிலான அரிசியை வாங்கிக் கொள்வது சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ரேஷன் கடை
ரேஷன் அட்டைகளை வைத்திருக்கும் பயனாளிகளான பொதுமக்களோ, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டப் பொருள்களை வாங்கமுடியாமல் மாதந்தோறும் திணறுகின்றனர். அயனாவரத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற வயதான பெண், ``இப்போது ரேஷன் கார்டு கையில் இல்லை. ஸ்மார்ட் கார்டு கொடுத்துள்ளனர். கார்டில் என் பிள்ளை, மருமகள், பேரன், பேத்திகளுடன் என் பெயரும் இருக்கிறது. `ஸ்மார்ட் கார்டில் பெயர் இருக்கிற குடும்ப உறுப்பினர் யாராவது வந்தால் மட்டுமே பொருள் தருவேன்' என்று, ரேஷன் கடையில் சொல்கிறார்கள். ஆனால், பொருள் வாங்க நான் போனால், `உன் பிள்ளையையோ, மருமகளையோ அனுப்பு' என்கிறார்கள். `பேரனைக் கூட்டி வருகிறேன்' என்று சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  அதேபோல் மாதத்தின் முதல் வாரத்தில் போனால், `பத்து தேதிக்கு மேல் வாங்க' என்பார்கள். ஏதாவது வேலை இருந்து இரண்டு நாள்கள் கழித்து, 12-ம் தேதிக்குச் சென்றால் `எல்லாம் முடிந்து விட்டது. மாதக்கடைசியில் வாங்க பார்க்கலாம்' என்று அனுப்பி விடுவார்கள். மாதக் கடைசியில் போனால், எந்தப் பொருளும் இல்லை' என்பார்கள். இப்படித்தான் ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல், ஒவ்வொரு முறையும் ஏமாந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

ரேஷன் அரிசி மூட்டைகளின் தயவால் தயாரிக்கப்படும் ரெடிமேட் மாவுப் பொட்டலங்கள் இல்லாத கடைகள் சென்னையில் குறைவு. ஹோட்டல்களும் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றன. இந்த விற்பனையையும் கடந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹாத்திம்பெய்க், ``ரேஷன் கடைகளில் நாம் பொருள் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட பொருள்களை வாங்கி விட்டதாக செல்போனில் மெசேஜ் வருகிறது. நான், கடந்த ஓராண்டாகவே இப்படிப்பட்ட குறுந்தகவல்களை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரேஷன் கடைக்குப் போய், `எந்தப் பொருளும் இல்லை; எல்லாம் தீர்ந்து விட்டது' என்று மாதாமாதம் ஏமாற்றத்துடன் திரும்பும் பல குடும்பங்களில் என்னுடைய குடும்பமும் ஒன்று. எனக்குத் தெரியாமல், ரேஷன் கடையில் என்னுடைய குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருள்கள் போட்டு விட்டதாகச் சொல்வதுதான் கொடுமை. சில ரேஷன் கடைகளில் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேசினால், `முதல்ல இங்கிருந்து கிளம்புய்யா' என்று பக்குவமாக மிரட்டி அனுப்புகின்றனர்" என்றார்.
2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு அமைச்சர் காமராஜ், ``நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தில் கடத்தல் சம்பந்தமாக, இதுவரை 913 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார். 
இந்த குண்டாஸ் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கலாம், குறைந்தும் இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை `குண்டாஸ்' சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு, அரிசிக் கடத்தல் நெட்வொர்க் வளர்ந்து நிற்கிறது என்பதோடு, இன்னும் அது தொடர்கிறது என்பதையும், இங்கே கவனிக்க வேண்டும். ரேஷன் பொருள்களைக் கடைகளில் தடையின்றி வாங்குவதில் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். `ஏழைகளின் தேவைகளுக்காகவே ரேஷன் கடைகள் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கிறது...' என்ற மக்கள் குரலை, அதிகாரத்தில் உள்ளோர் கவனத்துடன் கேட்க வேண்டும் 

Wednesday, 21 March 2018

அஞ்சல் வழிக் கல்வி/மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும்.தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக கருதி படிப்பைத் தொடரலாம்..அரசாணை எண்:-200


PERSONAL & ADMINISTRATION DEPT - 13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது - புதிய உத்தரவு அமல்



படித்துக்கொண்டிருக்கும் போது அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து படிப்பை முடிக்கலாம்-அரசாணை-732

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0SUlXdU1JcjZrZE0/view

G.O's REALTED TO TEACHERS & WARDEN & THEIR EXPLAINATION

G.O. Ms. No 119 Dt: September 09, 2009*

Public Services- Classification of Government Servants into four Groups - Modification - Ordered.


*G.O.Ms.No.111 Dt: August 09, 2010*

Public Services - Tamil Nadu State and Subordinate Services - Classification of Government servants into four groups - modified.

தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் குரூப் A,B,C,D என  நான்கு வகையில் பட்டியலிடப்படுகின்றனர்.


இந்த வகைப்பாடு அவரவர் பெறும் *CADRE PAY* அடிப்படையில் செய்யப்படுகிறது.


ரூ 1300 பெறுவோர் D
ரூ 1400 - 4400 க்கு கீழ் C
ரூ 4400 - 6600 க்கு கீழ் B
ரூ 6600ம், அதற்கு மேல் A

இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் C&D பிரிவினருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். உயர் வருவாய்ப் பிரிவினரான A,B க்கு கருணைத் தொகை மட்டுமே உண்டு.👇

4.அரசாணை அறிவோம் - பதிவு 4


 பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇

*1.(அ) அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*

(ஒரே பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)


*1.(ஆ) அரசாணை எண்:324 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்: 25.04.1995*

(வெவ்வேறு பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)



*2.(அ) அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*

(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

*2.(ஆ) அரசாணை எண்:1024 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*

(அதிகபட்ச   ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசின் விளக்கம்)

*2.(இ) அரசாணை (1டி) எண்.18*
*பள்ளிக்கல்வி துறை நாள்: 18.01.2013*

(M.Ed உடன் M.Phil / Ph.D பட்டங்களை சேர்த்து  இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

*2.(ஈ) கடித (நிலை) எண்:129 பள்ளிக்கல்வி [பக5(2)]-2013-1 நாள்:17.07.2013*

 (M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு எந்த தேதி முதல் வழங்குவது  குறித்த அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை )

 2.அரசாணை அறிவோம் - பதிவு 2


*G.O.Ms No.5 Dt: January 12, 2017*

Fundamental Rules - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை​

3.அரசாணை அறிவோம்  - பதிவு 3


*இடைநிலை ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*

(B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2. அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*

(M.A / M.Sc / M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

5.அரசாணை அறிவோம் - பதிவு 5


*முதுகலை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*1. அரசாணை நிலை எண்:747 நிதித்துறை நாள்:18.08.1986*

(M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2. அரசாணை நிலை எண்:1170 கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நாள்:20.12.1993*

( M.Phil / Ph.D / PGDTE தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

*Go.Ms.No. 194 Dt: October 10, 2006*   

பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.

6.அரசாணை அறிவோம் - பதிவு 6


*தமிழ் ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

தமிழாசிரியர்கள் (B.Ed அல்லாத )

*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*

(B.T/ B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*

(M.A தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

தமிழாசிரியர்கள் (B.Ed உடன் )

*1. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*

(M.A தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*

(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

7.அரசாணை அறிவோம் - பதிவு 7


*உடற்கல்வி ஆசிரியர் (இடைநிலை ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*அடிப்படை கல்வித்தகுதி:*

Government Teacher's Certificate in Physical Education  
Lower Grade (or) Higher Grade

*1(அ)அரசாணை(நிலை) எண்:624 கல்வித்துறை நாள்:13.07.1992 (இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்)*

(B.T / B.Ed கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)

*1(ஆ)அரசாணை(நிலை)எண்:95  கல்வித்துறை நாள்:21.01.1980*

(B.PEd / BPES / BMS கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)

*2.அரசாணை(நிலை)எண்:95  கல்வித்துறை நாள்:21.01.1980*

(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

8.அரசாணை அறிவோம் - பதிவு8


*உடற்கல்வி ஆசிரியர் (இடைநிலை ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*அடிப்படை கல்வித்தகுதி:*
B.PEd / BPES / BMS

*1.அரசாணை(நிலை)எண்:95  கல்வித்துறை நாள்:21.01.1980*

(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)

*2.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*

(M.Phil / Ph.D கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய 
உயர்வு)

*அடிப்படை கல்வித்தகுதி:*
M.PEd

*1.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*

(M.Phil / Ph.D in Phy.Edn (அ) PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையான இரண்டு கல்வி தகுதிகளுக்கு தலா ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

10.அரசாணை அறிவோம் - பதிவு10


*சிறப்பு ஆசிரியர்கள் பெறும் ஒரு ஊக்க ஊதிய உயர்வு பற்றிய அரசாணை👇*

*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*

(B.T/ B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

9.அரசாணை அறிவோம் - பதிவு9


உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇

*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*

(M.A / M.Sc / M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2. அரசாணை 1டி எண்:31 பள்ளிக்கல்வி துறை நாள்:12.02.2015*

(M.Phil / Ph.D தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

11.அரசாணை அறிவோம்- பதிவு11

*GO.Ms.No. 240 Dt: August 18, 2010*

பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

12.அரசாணை அறிவோம் - பதிவு12


*உடற்கல்வி இயக்குநர் நிலை-II (பட்டதாரி ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*அடிப்படை கல்வித்தகுதி:*
B.PEd / BPES / BMS

*1.அரசாணை(நிலை)எண்:95  கல்வித்துறை நாள்:21.01.1980*

(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)

*2.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*

(M.Phil / Ph.D கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய 
உயர்வு)

13.அரசாணை அறிவோம் - பதிவு13


உடற்கல்வி இயக்குநர் நிலை-II (பட்டதாரி ஆசிரியர் பணிநிலை) 
&
உடற்கல்வி இயக்குநர் நிலை-I (முதுகலை ஆசிரியர் பணிநிலை) 
பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇

*அடிப்படை கல்வித்தகுதி :*
M.PEd / MPES

*அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*

(M.Phil / Ph.D in Phy.Edn (அ) PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையான இரண்டு கல்வி தகுதிகளுக்கு தலா ஒரு ஊக்க ஊதிய உயர்வு ( அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் மட்டும் )

14.அரசாணை அறிவோம் - பதிவு14


*மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*

*1. அரசாணை நிலை எண்:747 நிதித்துறை நாள்:18.08.1986*

(M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)

*2.  அரசாணை நிலை எண்:283 நிதித்துறை நாள்:28.11.2007*

( M.Phil / Ph.D / PGDTE தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)

15.அரசாணை அறிவோம்  - பதிவு 15


*குடும்ப நல நிதி மற்றும் குழு காப்பீடு பற்றி சிறு விவரம்👇*

*குடும்ப நல நிதி*

இத்திட்டத்தின்படி பணிக் காலத்தில் இறக்கும் அரசு அலுவலர்களின் வாரிசுதாரருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.

*G.O.No.57 Dt: February 22, 2016*   

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued

*குழு காப்பீடு*

இத்திட்டத்தின்படி இறக்கும்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், சத்துணவுப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோரின் வாரிசுதாரருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.

*G.O.No.58 Dt: February 22, 2016*

GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

16.அரசாணை அறிவோம் - பதிவு16

*மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி சிறு விவரம் (NHIS)👇*

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு நீட்டித்து செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180 ரூபாய் செலுத்த வேண்டும்.

*G.O.No.169 Dt: June 09, 2016*

MEDICAL AID – NHIS for employees of Government Departments, Local Bodies, State Public Sector Undertakings, Statutory Boards and State Government Universities, etc., – Continuance beyond 30-06-2016 – Orders Issued.

*G.O.Ms.No.202 Dt: June 30, 2016*

MEDICAL AID – New Health Insurance Scheme, 2016 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family members through the United India Insurance Company Limited, Chennai Implementation - Orders – Issued.

*G.O No. 205 Dt: July 06, 2016*

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals - Deletion of Hospitals and Removal of Specialities in the hospitals – Orders – Issued.

18.அரசாணை அறிவோம் - பதிவு 18

பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியீடு.

*அரசாணை (1டி) எண். 385 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள்.02.11.2012*

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார். இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும்.

17.அரசாணை அறிவோம் - பதிவு 17


*சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம் (SPF 1984 & SPF 2000 )*

01.10.2000 மற்றும்  அதற்கு பின் அரசுப் பணியில் பணிபுரியும் பணியாளர்கள்  (SPF-2000) ரூ: 70/-வீதம் கட்டாயம் பிடித்தம் செய்யப்படவேண்டும். (20+50 என பிரித்து பிடிக்கக்கூடாது)

30.09.2000 மற்றும் அதற்கு முன் பணிபுரிபவர்கள் (SPF-1984) ரூ: 20/- வீதம் 148 தவணை கட்டாயம் பிடிக்கப்படவேண்டும். விரும்புவோர் (SPF-2000) ரூ: 50/- வீதம் 01.10.2000 முதல் பிடிக்கலாம்.

அரசு அலுவலர்கள் ஓய்வுபெறும் போது ரூ.2 இலட்சம் வரை சிறப்பு சேமநலநிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 *(அரசாணை எண்.504/ நிதி/2.11.2000)*

*G.O. No. 136 Finance (Pension) Department Dated: 29.02.1984*

Special Provident Fund –cum-Gratuity Scheme,1984

*G.O.No. 334 Finance (Pension)  Department Dated: 05.09.2001*

Payment of interest on Special Provident Fund –cum-Gratuity Scheme,1984 beyond 148 th instalment

*G.O.Ms.No.351 Finance (Pension II)  Dept.  Dated:25.04.1994*

Tamil Nadu Special Provident Fund cum Gratuity  Scheme,1984 – Government Contribution –  to those who  retire Voluntarily /on Medical Invalidation

*Govt. Ietter no. 75910/Pen/2000-1 Finance (Pension) Department Dated:02.11.2000*

Special Provident Fund –cum-Gratuity Scheme,2000 -Table of Payment

மேலும் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது சார்பான அரசாணைகள்

*G.O.No.61. Date.28.2.2013.*

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

*G.O.No.62. Date. 28.02.2013.*

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.